Sunday, May 12, 2024
Home » ரூ.2 கோடி சம்பளம் கேட்கும் அனுபமா

ரூ.2 கோடி சம்பளம் கேட்கும் அனுபமா

by kannappan

சென்னை: புதிய படங்களில் நடிக்க சம்பளத்தை உயர்த்தியுள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுடன் கொடி, அதர்வாவுடன் தள்ளிப்போகாதே படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம், கார்த்திகேயா 2. இந்த படம் டோலிவுட் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இந்தியில் டப்பிங் செய்து இந்த படம் ரூ.30 கோடி வரை வசூலித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெற்றி பெற்றுள்ளதால் இந்த படத்தின் ஹீரோ நிகில் சித்தார்த்துக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரது சம்பளமும் எகிறியுள்ளது. இதையடுத்து இந்த பட ஹீரோயின் அனுபமாவும் தனது சம்பளத்தை உயர்த்திருக்கிறார்.ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த அனுபமா, இப்போது ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார். தமிழில் ஜெயம் ரவி நடிக்கும் சைரன் படத்தில் அனுபமா நடிக்கிறார். இந்த படத்துக்கு அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி அனுபமா கூறும்போது, ‘ஒரேடியாக அதிக சம்பளம் கேட்டு சினிமாவுக்கு வந்தவள் அல்ல நான். படிப்படியாக முன்னேறி இருக்கிறேன். இது எல்லாமே எனது மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்பத்தான் நடந்துள்ளது. எனது தகுதிக்கு மீறி நான் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால், எனக்கு பட வாய்ப்புகளே வந்திருக்காது’ என்றார்….

You may also like

Leave a Comment

1 + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi