இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக உள்ள ஷெபாஸ் ஷெரீப் குடும்பத்தினர் 28 பினாமி கணக்குகள் மூலமாக ரூ.1,600 கோடி பண மோசடி செய்ததாக கடந்த 2020ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ஷெபாஸ், அவருடைய மகன்கள் ஹம்சா (47), சுலேமான் (40) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. சுலேமான் வெளிநாட்டிற்கு தப்பி விட்டார். ஷெபாசும், ஹம்சாவும் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக ஷெபாஸ் ஷெரீப்பும், ஹம்சாவும் வரும் செப்.7ம் தேதி நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….