வெள்ளகோவில், டிச.14: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதற்காக வெள்ளகோவில், தாராபுரம், பழனி, லாலாபேட்டை, திருச்சி, கரூர், காங்கயம், பகுதி விவசாயிகள் 61 பேர், 428 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், தரமான முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.85.16க்கும், 2ம் தரம் ஒரு கிலோ ரூ.58.88க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் 21 ஆயிரம் கிலோ கொப்பரை 15 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. ஏலத்தில், முத்தூர், காங்கயம், ஊத்துக்குளி ஆர்எஸ், ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் 10 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
ரூ.15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
previous post