திருப்பூர், ஜூலை 17: திருப்பூர் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி தாளாளர் கீதா தங்கராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆர்பி தங்கராஜன் ‘எனது மரம் எனது பொறுப்பு’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவியருக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.