வருசநாடு: வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் அறிவகம் (36). ராணுவ வீரர். இவர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். அங்கிருந்து விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவர், சில தினங்களுக்கு முன் மீண்டும் பஞ்சாப் சென்றார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.