குலசேகரம்,ஆக.22: ராஜிவ் காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் முளகுமூடு பகுதியில் உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வட்டார தலைவர் ஜெபா தலைமை வகித்தார். இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆற்றூர் குமார், ஒஸ்டின் ஞானஜெகன், எஸ்.பி.ராஜன், வட்டார நிர்வாகிகள் ராஜேஷ், ராஜதாஸ், ஜோண், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜிவ் காந்தி பிறந்த தின விழா முளகுமூடு
previous post