Thursday, May 9, 2024
Home » ராஜதந்திரம் எனும் பெயரில் துரோகம் செய்த பழனிசாமியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் கடும் தாக்கு பண பலம், அதிகார பலம் இருந்தும் தோற்றவர்

ராஜதந்திரம் எனும் பெயரில் துரோகம் செய்த பழனிசாமியின் வீழ்ச்சி தொடங்கி விட்டது திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் கடும் தாக்கு பண பலம், அதிகார பலம் இருந்தும் தோற்றவர்

by Karthik Yash

திருவண்ணாமலை, மார்ச் 19: பண பலம், அதிகார பலம் இருந்தும் தோற்றவர் எடப்பாடி பழனிசாமி. ராஜதந்திரம் எனும் பெயரில் துரோகம் செய்தவரின் வீழ்ச்சி தொடங்கிவிடடது என டிடிவி தினகரன் தெரிவித்தார். திருவண்ணாமலையில் நேற்று அமுமுக தலைவர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: ஒருசில தனிநபரின் சுய நலத்தால், பதவி வெறியால், பண திமிரால், துரோக புத்தியால், அதிமுக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரட்டை இலை சின்னம் இருந்தும், கடந்த 2019 தேர்தலில் ஒரு இடத்தில்தான் அதிமுக வெற்றிபெற்றது. 2021 தேர்தலில் பண பலம் அதிகார பலம் இருந்தும் ஆட்சியை இழந்தனர். ஆட்சியில் இருந்த அதிமுகவினர் செய்த ஊழலால் முறைகேடுகளால், பழனிசாமி கம்பெனியை மக்கள் ஆட்சியை விட்டு அகற்றினர். வினை விதைத்தவன் வினை அறுப்பான், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பதைப்போல, எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி ெதாடங்கிவிட்டது. தமிழ்நாட்டில் ராஜதந்திரம் எனும் பெயரில் துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்படுவார்கள். துரோகம் செய்தவர்களை மக்கள் தோற்கடிப்பார்கள். மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.

துரோகம் என்ற வார்த்ைதயை கண்டு அரசியல்வாதிகள் பயப்படுகிற வகையில், துரோகம் செய்தவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பதற்கு உதாரணமாக பழனிசாமியின் வீழ்ச்சி இருக்கும். அதன்பிறகு, அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். பழனிசாமி எனும் அசுரரின் வீழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அதிமுக வளர்ச்சி அடையும். பழனிசாமியுடன் இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் ஜெயலலிதாவிடம் பதவி பெற காரணமாக இருந்தவன் நான். நன்றியை மறந்துவிட்டார்கள். எனக்கு பதவி ஆசை கிடையாது. அதேபோல், ஓபிஎஸ்சும் பதவிக்காக அலைகிறவர் இல்லை. எனவே, நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மற்ற கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுத்துவிட்டு, பிறகு எனக்கு சீட் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவந்ததில் தவறு இல்லை. அதை ஆதரிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

1 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi