நாமக்கல்: ராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தனின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மதிவேந்தன் பெயர் இரண்டு தொகுதிகளில் இருப்பதாக அதிமுக புகார் கூறியதால் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் தொகுதியில் இருந்த பெயர் கடந்த ஆண்டே நீக்கப்பட்டு விட்டதாக ஆதாரத்துடன் மதிவேந்தன் விளக்க கடிதம் அளித்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார். …