கடையநல்லூர்,அக்.31: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு ஓபன் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டியில் மங்களபுரம் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். குற்றாலம் கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு ஓபன் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் நடந்தது. பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் கடையநல்லூர் மங்களபுரம் கிங் ஆப் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த யோகா ஆசிரியை சுமதியையும், பள்ளித்தாளாளர் எட்வர்ட் ராஜன், இயக்குனர் பிரசாந்த் மூர், பள்ளி முதல்வர் சொர்ணலதா, துணை முதல்வர் பொன்மணி, பயிற்சி ஆசிரியர் கராத்தே செல்வம் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.