Tuesday, May 21, 2024
Home » மேவாணியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

மேவாணியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

by MuthuKumar

கோபி, ஆக.6: கோபி அருகே உள்ள மேவாணியில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை அந்தியூர் எம்எல்ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். கோபி அருகே உள்ள மேவாணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஸ்குமார் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அந்தியூர் எம்எல்ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் கோபி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்திரி, கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் பொதுநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பேறு மருத்துவர், பல் மற்றம் கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், ரத்த பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஸ்கேன், மனநல மருத்துவம், எலும்பு சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 23 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு மேற்சிகிச்சைக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் கவிதா (வெள்ளளபாளையம்) பிரவீணா (நடமாடும் மருத்துவ குழு) பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் கர்ப்பப்பை புற்று நோய் கண்டறிவதற்கு வரவழைக்கப்பட்டு நோய் கண்டறியப்பட்டது.

1063 பேர் கலந்து கொண்ட முகாமில் 72 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 118 பேருக்கு இ.சி.ஜியும் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு ரத்த பரிசோதனை, கொழுப்பு பரிசோதனை, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டது. 6 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு கோவை அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை எம்எல்ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார். முகாமில் மேவானி ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, துணைத் தலைவர் மகாலிங்கம், கிராம சுகாதார செவிலியர் மரகதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

sixteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi