செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் உள்ள என்.ஜி.ஓ.நகர் பகுதியில், அங்கன்வாடி மையம் சுமார் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2019ம் ஆண்டு கட்டப்பட்டது.இதில், குழந்தைகளை கவரும் வகையில் அங்கன்வாடி மையத்தில் புதிதாக வண்ணம் தீட்டி குழந்தைகளை கவரும் வகையில் வண்ண வண்ண படங்களை வரைந்துள்ளனர். மேலும், குழந்தைகளின் படிப்பு திறன் வளர்த்துக்கொள்ள சுவர்களில் ஏ, ‘ இந்நிலையில், அந்த அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பும், தண்ணீர் வசதியும் செய்து தரவில்லை. எனவே, பயன்பாட்டிற்கு வரவேண்டிய இந்தஅங்கன்வாடி மையத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து முட்புதராக காட்சி அளிக்கிறது. எனவே, 3 ஆண்டுகளாக திறக்கபடாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
மேலமையூர் ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்: உடனே திறக்க பொதுமக்கள் கோரிக்கை
previous post