கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, திரிணாமுல் எம்எல்ஏ மதன் மித்ரா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோரை கடந்த திங்களன்று இரவு சிபிஐ கைது செய்தது. அவர்களுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், அந்த உத்தரவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், 4 திரிணாமுல் தலைவர்களும் சிபிஐ பிடியில் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை மாநிலத்துக்கு வெளியே நடத்த உத்தரவிடக் கோரி சிபிஐ சார்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே போல, ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட 4 திரிணாமுல் தலைவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விரு மனுக்களையும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது. …
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைவர்கள் ஜாமீன் மனு இன்று விசாரணை
previous post