மேட்டூர்: மேட்டூர் அணையில் கட்லா, ரோகு, மிர்கால், அரஞ்சான், ஆரால், கெழுத்தி, கெண்டை, திலேபி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீன் ரகங்கள் உள்ளன. மேட்டூர் நீர் தேக்கத்தில் 2000 மீனவர்கள் உரிமம் பெற்று, மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை டெல்டா பாசன கால்வாயில், மாதையன்குட்டை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் காவேரிகரையின் இருபுறமும் துர்நாற்றம் வீசி வருகிறது. பலவகை மீன்கள் இருந்தாலும், குறிப்பாக அரஞ்சான் மீன்கள் மட்டுமே செத்து மிதக்கின்றன. கடும் வெப்பம் காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்தனவா?, உணவு கிடைக்காமல் இறந்தனவா அல்லது மேட்டூர் காவிரியில் ஆங்காங்கே கலக்கின்ற ஆலைகளின் கழிவுநீர் மற்றும் மேட்டூர் அனல் நிலைய கழிவுநீர் கலப்பதால், கனிமங்கள் அதிகரித்து மீன்கள் செத்து மிதக்கின்றனவா என்பது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்….