மேட்டூர், மார்ச் 26: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மை காரணமாக, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 200 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 78கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 90 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 61.03 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 60.90 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 25.36 டிஎம்சியாக உள்ளது.