Saturday, May 18, 2024
Home » மூன்று குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு சாவு

மூன்று குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு சாவு

by Ranjith

 

புதுச்சேரி, செப். 25: புதுச்சேரி முத்தியால்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அருண்குமார் (35), டிரைவர். வ.உ.சி.நகரை சேர்ந்தவர் உஷா. இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக அருண்குமாருக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். மேலும், அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன், மனைவிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடன் தொல்லையும் அதிகமாகியுள்ளது. இதனால் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மாமியார் லீனாதேவி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து இருவரையும் சமாதானம் செய்துவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உஷா தனது குழந்தைகளுடன் பெட்ரூமிலும், அருண்குமார் ஹாலிலும் படுத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் எழுந்து பார்த்தபோது, பெட்ரூமில் உள்ள பேனில் உஷா தூக்குப்போட்டு தூங்கி நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அருண்குமார் தனது மனைவியை மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

11 − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi