நாங்குநேரி,பிப்.5: மூன்றடைப்பு அருகேயுள்ள மாயனேரி தெற்குத் தெருவை சேர்ந்தவர் பட்டாணி. சமையல் மாஸ்டராக தேனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (43) கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ராமலட்சுமி (19) பிளஸ் 2 வரை படித்துவிட்டு வீட்டில்இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்த சுப்புலட்சுமி காலை 10 மணியளவில் மறுபடியும் வீடு திரும்பியபோது தனது மகள் ராமலட்சுமியை காணவில்லை. இதனால் பதறிய அவர் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் ராமலட்சுமி குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்புலட்சுமி, பின்னர் இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த போலீசார், மாயமான ராமலட்சுமியை தேடி வருகின்றனர்.