நெல்லை, பிப்.29: விஜயநாராயணத்தில் மூதாட்டியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அடுத்துள்ள ஐந்தாங்கல் சர்ச் தெருவை சேர்ந்தவர் முத்து(60). இவரிடம் ஏழாங்கல் நடுத்தெருவை சேர்ந்த தர்மன் (33) தகராறு செய்து மிரட்டி உள்ளார். இதுகுறித்து மூதாட்டி முத்து விஜயநாராயணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ உதயலட்சுமி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மூதாட்டியிடம் தகராறு செய்த தர்மனை கைது செய்தார்.