Thursday, May 16, 2024
Home » மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது

by Karthik Yash

ஓசூர், நவ.17: மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசி (59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓசூர் கோகுல் நகர் பகுதியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த 3ம் தேதி தமிழரசி அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவர் மீது மிளகாய் பொடியை தூவி, அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றார். இந்த சம்பவம் குறித்து, தமிழரசி ஓசூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதுகுறித்து ஓசூர் நகர போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில், மூதாட்டியிடம் தங்க செயினை பறித்து சென்றவர் பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது, ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

8 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi