Sunday, June 16, 2024
Home » மூச்சு திணறல், காய்ச்சல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி: கொரோனா தொற்று இல்லை

மூச்சு திணறல், காய்ச்சல் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி: கொரோனா தொற்று இல்லை

by kannappan

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்ததால் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது  உறுதியாகியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து  குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2017ம்  ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்  சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை  காலம் வரும் பிப்ரவரி 14ம் தேதி முடிந்தாலும், விடுமுறை உள்பட பல  காரணங்களால் சசிகலாவை வரும் 27ம் ேததி விடுதலை செய்வதாக பெங்களூரு பரப்பன  அக்ரஹாரா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், சிறையில் உள்ள  சசிகலாவுக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. நேற்று காலை  திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில்  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மூச்சு திணறல்  அதிகமாக இருந்ததால், வேறு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க சிறை  நிர்வாகம் முடிவு செய்தது. ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  நேற்று மாலை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு  அவர் அழைத்து வரப்பட்டார். அவருக்கு முதலில் கோவிட்-19 பரிசோதனை  நடத்தப்பட்டது. இதில், நெகடிவ் என வந்ததை தொடர்ந்து, ரத்த அழுத்தம், சர்க்கரை  அளவு பரிசோதனை செய்யப்பட்டது. அவை இரண்டும் சரியாக இருந்தது. ஆக்சிஜன்  அளவும் 84 சதவீதம் இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இருப்பினும், மூச்சுத்  திணறலும் காய்ச்சல் குறையாமல் இருந்ததால், நேற்று இரவு மருத்துவமனையில்  தங்க வைத்து சிகிச்ைச அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சசிகலா உடல் நிலை  பயப்படும் வகையில் இல்லை. நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சசிகலாவுக்கு  உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சென்னையில்  இருந்து உறவினர்கள், அவரது வக்கீல்கள் பெங்களூரு வந்துள்ளனர். சசிகலா  விடுதலைக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அவர் உடல் நலம்  பாதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது….

You may also like

Leave a Comment

15 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi