தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்ட நிலையிலும், முல்லை பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து கொண்டே வந்தது.இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 5 மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும், ஆற்றை கடக்கவும், குளிக்கவும் துவைக்கவும் கூடாது என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை எடுத்துள்ளனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருவி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே உபரி நீராக திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 70 கன அடி வரை தேக்கி வைக்க பொதுப்பணி துறையினர் முடிவு செய்துள்ளனர்….