Saturday, June 1, 2024
Home » முன்பகை தகராறில் வாலிபரை வெட்டிய 4 பேர் பிடிபட்டனர்

முன்பகை தகராறில் வாலிபரை வெட்டிய 4 பேர் பிடிபட்டனர்

by kannappan

பெரம்பூர்: ஓட்டேரி எஸ்.வி.எம்.நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (எ) அலெக்ஸ்(22), நேற்று முன்தினம் ஓட்டேரி சந்தியப்பன் முதல் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் அவரை கத்தியால் வெட்டினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக தலைமை செயலக காலனி குடியிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஓட்டேரி எஸ்.வி.எம்.நகர் சி-பிளாக் பகுதியை சேர்ந்த அருண் மற்றும் 3 பேர் சேர்ந்து விக்னேஷை வெட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் 23ம் தேதி தலைமை செயலக காலனி பகுதியில் நடந்த தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு இதில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை செயலக காவலர் குடியிருப்பு போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக விக்னேஷ் நேற்று எதிர்தரப்பினரால் வெட்டப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி சந்தோஷ்(27), அருண்ராஜ்(23), செல்வம்(26), தமிழரசன்(26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

one × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi