திருக்காட்டுப்பள்ளி, செப்.24: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே முத்தாண்டிப்பட்டி ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். முகாமில் 916 பேருக்கு மருத்துவ குழுவினரால் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கே.பொற்செல்வி, ஒன்றியக்குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, பூதலூர் வட்டார மருத்துவர் சுந்தரம், பாளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வசந்தா, சுகாதார ஆய்வாளர் ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.