சாயல்குடி, ஜூலை 15: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் உலக காகித பை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மேஜிக்பஸ் தொண்டு நிறுவனம் இணைந்து உலக காகித பை தினம் கடைபிடிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுல்தான் வரவேற்றார். நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களைகளை தவித்து காகித துணிப்பைகளை பயன்படுத்துவது குறித்து மாணவரக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்வில் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் சாகுல்ஹமீது, தொண்டு நிறுவன மாவட்ட மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.