அரூர், மார்ச் 28: கம்பைநல்லூர் ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்2 மாணவர்கள், அரூர் அருகில் லிட்டில் டிராப்ஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள 160 முதியவர்களுக்கு, தங்களது சேமிப்பு பணத்திலிருந்து ₹10,000 மதிப்பிலான உணவு மற்றும் உதவி பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குனர் ஜான்இருதயராஜ், ஆசிரியர்கள் உடன் இருந்து மாணவர்களுடன் இணைந்து பொருட்களை வழங்கினர்.
முதியோர் இல்லத்திற்கு உணவு பொருட்கள்
previous post