Monday, June 17, 2024
Home » முதல் கூட்டத்தில் 108 தீர்மானங்கள் நிறைவேற்றம் உடுமலையை தலைசிறந்த நகராட்சியாக மாற்ற நடவடிக்கை-நகராட்சி தலைவர் மத்தீன் உறுதி

முதல் கூட்டத்தில் 108 தீர்மானங்கள் நிறைவேற்றம் உடுமலையை தலைசிறந்த நகராட்சியாக மாற்ற நடவடிக்கை-நகராட்சி தலைவர் மத்தீன் உறுதி

by kannappan

உடுமலை : உடுமலை நகராட்சி முதல் கூட்டத்தில் 108 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, உடுமலை நகராட்சிக்கு புதிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நகர மன்ற முதல் கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் மத்தீன் தலைமை வகித்தார்.கூட்டம் தொடங்கியதும், துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். திமுக சார்பில் கவுன்சிலர்கள் வேலுசாமி, ஆசாத், மும்தாஜ், அதிமுக சார்பில் ரம்யா, மதிமுக சார்பில் ராமதாஸ், மனித நேய மக்கள் கட்சி சார்பில் அப்துல்கரீம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.வேலுசாமி பேசுகையில், உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளை அமைக்க வேண்டும். குட்டைத்திடலில் கலையரங்கம் அமைக்க வேண்டும். நிதியாதாரத்தை நாமே பெருக்கிகொண்டு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும். எல்லாவற்றையும் முதல்வர் தருவார் என எதிர்பார்த்து இருக்கக்கூடாது, என்றார்.மதிமுக ராமதாஸ் பேசுகையில், கடந்த 2007ம் ஆண்டு பெரியார் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகையினால் தற்போது பெரியார் சிலை அமைக்க வேண்டும், என்றார்கவுன்சிலர் ஜெயக்குமார் பேசுகையில், நகரமன்றத்தில் அண்ணா படம் வைக்க வேண்டும். அதேபோல, நகராட்சி கட்டிடத்தின் மேல் பகுதியில் தமிழ் வாழ்க என்ற போர்டு வைக்க வேண்டும், என்றார். இதற்கு பதிலளித்த நகராட்சி தலைவர் மத்தீன், கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்.கூட்டத்தில் சொத்து வரிஉயர்வு உட்பட 102 தீர்மானங்களும், 6 சிறப்பு தீர்மானங்களும் தாக்கல் செய்யப்பட்டன. சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திமுக கவுன்சிலர்கள் பேசுகையில், அதிமுக ஆட்சியில்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்பொழுது திமுக ஆட்சியில் அமல்படுத்துகிறோம், என்றனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மத்தீன் பேசியதாவது: பழமையும், பெருமையும் வாய்ந்த உடுமலைப்பேட்டை நகராட்சியின் தலைவராக நானும், மன்ற உறுப்பினர்களாகிய நீங்களும் பொறுப்பேற்றிருப்பது வரலாற்றில் பேசப்படக் கூடியதாக இருக்க வேண்டும். வந்தோம் வென்றோம் சென்றோம் என இருக்க கூடாது.உடுமலை நகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வசதி, சாலை வசதி, திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி மற்றும் அத்தியாவசிய பணிகள் ஆகியவற்றுடன் இந்த மன்றம் பயணிக்கும். பழுதடைந்த சாலைகள், பாதாள சாக்கடை குழாய்கள் சீரமைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் தேவையை அறிந்து குடிநீர் விநியோகிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை பணி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு செய்யப்படும். நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டப் பணி, புதிதாக தெருவிளக்கு, மழைநீர்வடிகால் ஏற்படுத்தி தரப்படும். உடுமலை நகராட்சியை தலைசிறந்த நகராட்சியாக மாற்ற தேவையான அனைத்து ஆக்கப்பூர்வமான திட்டங்களையும், நம்ம உடுமலை என்ற பெயருடன் பொதுமக்களுக்கு பணி செய்வோம்.இவ்வாறு  அவர் பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம்: 33 வார்டுகளிலும் குப்பை அகற்ற தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் ரோடு ஸ்வீப்பர் என்ற வாகனம் வாங்கப்படும். குப்பைகளை உரமாக மாற்றக்கூடிய பயோ-மாலி என்ற இயந்திரம் வாங்கப்படும்.நம்ம உடுமலை திட்டத்தின்கீழ் பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நகரில் 5 இடங்களில் அடர்வனம் அமைக்கப்படும். மரக்கன்றுகள் நடப்படும். நகராட்சியின் வருவாயை பெருக்க அரசின் வழிகாட்டுதல்படி சொத்து வரி, காலி மனை வரி உயர்த்தப்படுகிறது. இவை உட்பட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன….

You may also like

Leave a Comment

18 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi