செங்கல்பட்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தலைமை வகித்தார். வீராபுரம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் முன்னிலை வகித்தார் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு, தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள 350 பேருக்கு பிரியாணி, வேட்டி, சேலைகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் உதயாகருணாகரன், திமுக பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆப்பூர் சந்தானம், ராஜேந்திரன், அருள்தேவி, கதிரவன், வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் டில்லி, குண்ணவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா, உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் சிங்கபெருமாள்கோயில் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைனைப்பாளர் கே.பி.ராஜன் தலைமையில் கேக் வெட்டி 300 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஜே.ஆர்.கே.ரத்தீஷ், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி துரைபாபு உள்பட பலர்கலந்துகொண்டனர். செங்கல்பட்டு நகர திமுக சார்பில் நகர செயலாளர் எஸ்.நரேந்திரன் தலைமையில் நகராட்சியின் 33 வார்டுகளில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மறைமலைநகர் நகர திமுக சார்பில் நகராட்சியின் 21 வார்டுகளில் நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிளாம்பாக்கம் கிளை செயலாளர் சி.ஜெ.கார்த்தி ஏற்பாட்டில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி தலைமை தாங்கினார். எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன், ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையோரத்தில் 70 அடி உயர கம்பத்தில் திமுக கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர், 69 கிலோ கேக் வெட்டி, 1,500 பெண்களுக்கு புடவைகளும், 2,000 பேருக்கு பிரியாணியும் வழங்கினார்.இதில் நிர்வாகிகள் மெய்யழகன், தமிழ்ச்செல்வம், ஸ்ரீகாந்த், வார்டு உறுப்பினர்கள் கலைவாணி வினோத், மஞ்சுளா புஷ்பராஜ், மலர் தனசேகர், பார்த்திபன், தேவி நேரு, சாந்தி கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி செல்வம், ஜே.கே.தினேஷ், மலைராஜா, மோகனா கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், சி.ஜெ.ராஜா நன்றி கூறினார்….