உடுமலை, மார்ச்1: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி சார்பில் லெனின் நினைவு நூற்றாண்டு நிதியளிப்பு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் மூங்கில் தொழுவு பிரிவில் நடந்தது.லட்சுமணசாமி தலைமை வகித்தார்.தண்டபாணி வரவேற்றார். மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் ராஜு, மாரியப்பன், எஸ்.பழனிச்சாமி, ஆர்.பழனிச்சாமி, பழனியம்மாள், வேலுச்சாமி, சசிகலா, மோகனசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.