அண்ணாநகர்: முகப்பேரில் இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது டைரியில், உருவாக்கமான கடிதம் எழுதி இருந்தது தெரிய வந்தது. சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சுகுந்தன் (25). ஆந்திரா, திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மலா (23). இவர்களுக்கு கடந்த 2020ல் திருமணம் நடந்தது. நிஷாந்த் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. சுகுந்தன் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில், நேற்று மாலை நிர்மலா திடீரென தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த சுகுந்தனின் தாய் நிர்மலா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர், நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், நிர்மலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, அவரது டைரியை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நிர்மலா,‘எனது கணவர் சுகுந்தன் எனது குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். எனது தாய், தந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை. அதனால், தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என குறிப்பிட்டிருந்தார். மேலும், நிர்மலாவுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமே ஆவதால், திருமங்கலம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வயது ஆண் குழந்தையை தவிக்கவிட்டு, உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….
முகப்பேரில் பரபரப்பு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
previous post