Thursday, May 9, 2024
Home » முகக்கவசம் போடலனா ரூ.200, எச்சில் துப்புனா ரூ. 500, சலூன், ஜிம்-ல விதிகளை மீறுனா ரூ. 5000 : சென்னையில் புது ரூல்ஸ்!!

முகக்கவசம் போடலனா ரூ.200, எச்சில் துப்புனா ரூ. 500, சலூன், ஜிம்-ல விதிகளை மீறுனா ரூ. 5000 : சென்னையில் புது ரூல்ஸ்!!

by kannappan

சென்னை : சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை மீறுபவர்களிடமிருந்து பின்வரும் அட்டவணையின் படி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. *சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் ரூ. 200 அபராதம் *பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் *கொரோனா குவாரன்டைன் விதியை மீறினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். *சென்னையில் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காவிடில் ரூ. 500 அபராதம் *சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் ரூ.10 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. *வணிக வளாகங்கள், சலூன்கள், ஜிம் உள்ளிட்ட இடங்களில் விதிகளை பின்பற்றாவிடில் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.*சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம் *2 முறைக்கு மேல் கொரோனா விதிகளை மீறினால் கடை, நிறுவனம், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்படும்.*சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் இருந்து அபராதம் வசூலிக்க மண்டலம் வாரியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  *ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் தினமும் ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது….

You may also like

Leave a Comment

13 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi