எட்டயபுரம், நவ. 28: எட்டயபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. மீனாட்சிபுரம் பஞ். தலைவர் மோகன் தலைமை வகித்தார். இணை இயக்குநர் சஞ்சீவிராஜ், நோய் புலனாய்வு துறை உதவி இயக்குநர் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சினை பரிசோதனை, சிகிச்சை, குடற்புழு நீக்கம், கோழி கழிச்சல் தடுப்பூசி ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. 800க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறந்த முறையில் கன்று வளர்த்த மற்றும் சிறந்த முறையில் கால்நடை பராமரித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டது.கடலையூர் கால்நடை மருத்துவர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மீனாட்சிபுரத்தில் கால்நடை விழிப்புணர்வு முகாம்
previous post