கோவை, அக். 21: கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தின் முன்பு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் நடந்த தர்ணாவில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர். அவர்கள், மின்வாரிய ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.