வேப்பூர், ஜூன் 27: வேப்பூர் அடுத்த அடரி மாரியம்மன் கோயில்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் ராஜதுரை(26). இவர் நேற்று மாலை வேப்பூரிலிருந்து அடரி நோக்கி பைக்கில் வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவிற்கு மீன் ஏற்றிச் செல்ல வந்த மினிலாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பூர் போலீசார் ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.