மாவட்ட வழங்கல் அதிகாரி பொறுப்பேற்பு
நாகர்கோவில், மார்ச் 16: கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அதிகாரியாக டாக்டர் சுப்புலெட்சுமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை பொதுவிநியோக ஊழியர் சங்க மாநில செயலாளர் குமரி செல்வன், மாவட்ட தலைவர் ஜெய்சன் மகேஷ், பொருளாளர் வினோத், ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்விழி, பிரியா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.