கிருஷ்ணகிரி, மே 4: கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், கோடைகால பயிற்சி துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், மைய நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான கோடை கால பயிற்சியை துவக்கியது. இதில் மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் ஜாய், மாநில தலைவர் நுகர்வோர் விழிப்புணர்வு நலச்சங்கம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 50 பேருக்கு, வாழ்வில் முன்னேற்றத்தில் நூலக பயன்களையும், பயிற்சி வகுப்பின் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து வானவில் பன்னீர்செல்வம், ஓவிய வகுப்பினை துவங்கி மாணவியருக்கு பயிற்சி அளித்தார். தொடர்ந்து நடக்கவுள்ள கோடைகால பயிற்சி வகுப்பில், வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடக்குமெனவும், மாணவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.