Thursday, May 16, 2024
Home » மாவட்டம் முழுவதும் பறக்கும் படையுடன் இணைந்து ஆயுதப்படை போலீஸ் சோதனை

மாவட்டம் முழுவதும் பறக்கும் படையுடன் இணைந்து ஆயுதப்படை போலீஸ் சோதனை

by MuthuKumar

சிவகங்கை, ஏப்.14: சிவகங்கை மாவட்டத்தில் பறக்கும் படையினருடன் இணைந்து ஆயுதப்படை படை போலீசாரும் வாகன பரிசோதனைநடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வருகிற ஏப்.19ல் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு நடத்தை விதிகள் இருந்தாலும் வாகன பரிசோதனையில் தேர்தல் கமிஷன் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வாகனங்கள் மூலமாக பணம், பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செக்போஸ்ட்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் சிவகங்கையில் 3, மானாமதுரை 2, காரைக்குடி 3, தேவகோட்டை 2, திருப்பத்தூரில் 3என மொத்தம் 13செக் போஸ்டுகள் உள்ளன. இந்நிலையில் கூடுதல் பாதுகாப்பு பணிக்கு நாகாலாந்து ஆயுதப்படை போலீஸ், திருச்சி பட்டாலியன் போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் என மொத்தம் 357 போலீசார் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

2 உதவி கமிஷனர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐக்களும் வருகை தந்துள்ளனர். இவர்கள் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்ட எல்கையில் உள்ள செக்போஸ்டுகள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குறிய கிராமங்களில் இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது, தேர்தல் நெருங்குவதால் டூவீலர், கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அனைத்தும் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் பரிசோதனைக்கு பின்பே அனுப்பப்படுகின்றன. ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வெளி மாநில, வெளி மாவட்ட பாதுகாப்பு படையும் அவர்களுடன் இணைந்துள்ளது. தேவையான இடங்களில் இப்படை கூடுதலாக பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நாள் வரை தற்போதைய பணியிலேயே அவர்கள் ஈடுபடுவர் என்றார்.

You may also like

Leave a Comment

2 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi