Saturday, May 11, 2024
Home » மால்டோவாவை வீழ்த்தியது இந்தியா: 6 அணிகளும் அமர்க்களம்

மால்டோவாவை வீழ்த்தியது இந்தியா: 6 அணிகளும் அமர்க்களம்

by kannappan

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 2வது சுற்றில் மால்டோவா அணியுடன் நேற்று மோதிய இந்தியா 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியாவின் 6 அணிகளும் நேற்று மாமல்லபுரத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் ஹரிகிருஷ்ணா பென்டாலா, எஸ்.எல்.நாராயணன், சசிகிரண் கிருஷ்ணன் ஆகியோர் மால்டோவா வீரர்களுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து தலா 1 புள்ளி பெற்றனர். இந்திய வீரர் எரிகைசி அர்ஜுன் – மகோவெய் ஆந்த்ரே (மால்டோவா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா அரை புள்ளி பெற்றனர். மற்றொரு 2வது சுற்றில் இந்தியா-2 அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. அதில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் போஸ் சத்வானி ரவுனக் ஆகியோர் அபாரமாக விளையாடி 4-0 என்ற கணக்கில் முழுமையான வெற்றியை வசப்படுத்தினர். மெக்சிகோ – இந்தியா-3 அணிகள் மோதிய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. இந்த போட்டியில் இந்தியாவின் சூரிய சேகர் கங்குலி, எஸ்.பி.சேதுராமன், அபிஜீத் குப்தா ஆகியோர் டிரா செய்து தலா 1/2 புள்ளி மட்டுமே பெற்ற நிலையில், மெக்சிகோவின் கபோ விடால் உரியலுடன் மோதிய கார்த்திகேயன் முரளி அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றார். இந்த போட்டியில் இந்தியா 2.5 – 1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வீழ்த்தியது.மகளிர் அணிகள் அசத்தல்: செஸ் ஒலிம்பியாடில் நேற்று களமிறங்கிய 3 இந்திய மகளிர் அணிகளும் வெற்றியை பதிவு செய்தன. இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, டானியா சச்தேவ், குல்கர்னி பக்தி ஆகியோர் வெற்றிகளைக் குவித்த நிலையில், கொனேரு ஹம்பி – ஜுரியல் மரிசா (அர்ஜென்டினா) மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததை அடுத்து இரு வீராங்கனைகளும் தலா அரை புள்ளி பெற்றனர். மற்றொரு மகளிர் 2வது சுற்றில் இந்தியா-2 அணி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் லாத்வியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் வந்திகா அகர்வால், சவும்யா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ் வெற்றி பெற்ற நிலையில், பத்மினி ராவுத் – பெர்ஸின இல்ஸி மோதிய ஆட்டம் டிரா ஆனது. சிங்கப்பூர் அணியுடன் மோதிய இந்தியா-3 அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இப்போட்டியில் ஈஷா கர்வாடே, பி.வி.நந்திதா வெற்றியை பதிவு செய்ய, பிரத்யுஷா மற்றும் விஷ்வா வஸ்னவாலா டிரா செய்தனர்.* ஒலிம்பியாடில் கலக்கும் 8 வயசு பொடிசு!44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் பாலஸ்தீன அணியில் இடம் பெற்றுள்ள 8 வயது சிறுமி ராண்டா செடர் நேற்று கொமோராஸ் அணியின் பாஹிமா அலி முகமதுவுடம் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடி வென்ற ராண்டா 1 புள்ளியை பெற்று அசத்தினார். மகளிர் பிரிவில் நடந்த இந்த போட்டியில் பாலஸ்தீனம் 4-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது. நடப்பு செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமை ராண்டாவுக்கு கிடைத்துள்ளது….

You may also like

Leave a Comment

10 + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi