மார்த்தாண்டம், ஏப்.17 : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோருக்கு ஆதரவாக மாணவர் காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்றார். பின்னர் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் உள்பட நகர பகுதியை சுற்றியுள்ள வியாபாரிகள், பொதுமக்களிடம் ”கை” சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். அப்போது மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன், மாணவர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் ரெஜின், ஷாஜி, எபின், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஆரோமல் வினிஸ், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லீபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.