ஊட்டி, மார்ச் 16: வரும் 19ம் தேதி ஊட்டியில் நடக்கும் நகர செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள திமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊட்டி நகர திமுக செயலாளர் ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊட்டி நகர செயல்வீரர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு ஒக்கலிகள் திருமண மண்டப அரங்கில் நடக்கிறது.
இக்கூட்டம், மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஊட்டி சட்டமன்ற தொகுதி தலைமை கழக பார்வையாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்ற உள்ளனர். நீலகிரி எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புறையாற்றுகிறார்.
எனவே, கூட்டத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், ஊட்டி நகர நிர்வாகிகள், அனைத்து வாக்குச் சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச் சாவடி முகவர்கள், வாக்குச் சாவடி குழுவினர், ஊட்டி நகராட்சி தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.