மானூர், நவ.19: மானூர் அருகேயுள்ள கட்டப்புளியைச் சேர்ந்தவர் மாடசாமி(39). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேன் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை கம்பெனி பணியாளர்களை வேணில் ஏற்றிக்கொண்டு எட்டாங்குளத்திலிருந்து மானூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர் திசையில் பைக்கில் வந்த எட்டாங்குளத்தைச் சேர்ந்த ரங்கம் மகன் மகாராஜா(21), மாரியப்பன் மகன் குமார்(19) இருவரும் வேனை வழிமறித்து மாடசாமியிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து மானூர் காவல் நிலையத்தில் மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.