நெல்லை, பிப்.12: மானூரில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் குறிச்சிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுலைமான் (51). இவரது மனைவி ஹையர்நிஷா (49). இவர்கள் கடந்த 9ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்நிலையில் மறுநாள் 10ம் தேதி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மானூர் போலீசில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு மானூர் போலீசார் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். மேலும் விரல் ரேகை பிரிவு போலீசார் திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நகை திருடிய மர்ம நபர்களை ேதடிவருகின்றனர்.