தேவகோட்டை, நவ. 4: தேவகோட்டை பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றனர். 64 வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையர் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
19 வயது பிரிவில் அருண் குண்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் ஆகாஷ், மதன்குமார் சூர்யர், சிவா ஆகியோர் தங்க பதக்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் ஆகாஷ் வெள்ளி பதக்கமும் பெற்று வந்தனர். மகாராஷ்ட்ரா மாநிலம் சந்திரபூரில் நடைபெற உள்ள அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி கொடுத்த உடற்கல்வி இயக்குநர் முனைவர் பூமிநாதன், உடற்கல்வி ஆசிரியர் சேவுகராஜன் சந்திரன் ஆகியோரையும் பள்ளி நிர்வாகத்தினர் தலைமையாசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் பாராட்டினர்.