பணகுடி, பிப்.14: பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் பல்வேறு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவ, மாணவிகள் சுனில் கிஷோர், ஜெரிக் காலிஸ், சஞ்சய் ஜேஷ்வா, சகாய சிதின், ஜெய்வின் ஆன்டோ, அருண், டேனியல், தனிஷ் ஜேஷ்வா, மரிய ஜோவிஷ், தேவதர்ஷன், ஆண்டனி அஜிஸ், மரிய தரண்யா, மரிய வின்சியா, ஹனிஷ்கா, சாஷினி ஆகியோர் 13 தங்கப் பதக்கங்களும், 9 வெள்ளிப் பதக்கங்களும் 6 வெண்கலப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களான சிக்கந்தர் சார்ஜன், அஜித்குமார், குணால் ஆகியோரையும், பள்ளித் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.