வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உட்பட வேலூர் காவல் சரகத்தில் 7 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 57 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் டிஎஸ்பிக்களாக பதவி உயர்வு பெறும் இன்ஸ்பெக்டர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் எஸ்பிசிஐடி இன்ஸ்பெக்டர் கே.வேலு பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும், வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் ஆர்.குமார் வேலூர் சரக இன்சர்வீஸ் டிரைனிங் சென்டர் டிஎஸ்பியாகவும், வேலூர் ஐபிஆர்இசி கிரைம் இன்ஸ்பெக்டர் எஸ்.ரவிக்குமார் கிருஷ்ணகிரி மாவட்ட நிலஅபகரிப்பு சிறப்புப்பிரிவு டிஎஸ்பியாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.