வேலூர், மார்ச் 17: நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் மாஜி படை வீரர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப்படையினர், போலீசார், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தவிர முன்னாள் படைவீரர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.