Thursday, May 9, 2024
Home » மாநகர பேருந்தை வழிமறித்து தகராறு பச்சையப்பன் – மாநில கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதல்: கத்தியுடன் துரத்திய 2 பேர் கைது: சமூக வலைதள வீடியோவால் அதிரடி

மாநகர பேருந்தை வழிமறித்து தகராறு பச்சையப்பன் – மாநில கல்லூரி மாணவர்கள் மீண்டும் மோதல்: கத்தியுடன் துரத்திய 2 பேர் கைது: சமூக வலைதள வீடியோவால் அதிரடி

by kannappan

அண்ணாநகர்: மாநகர பஸ்சை வழிமறித்து தகராறு செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை சாலையில் கத்தியுடன் துரத்திய 2  மாநில கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து ஆவடி நோக்கி (தடம் எண் 40பி) மாநகர பஸ் கடந்த திங்கட்கிழமை புறப்பட்டு சென்றது. அண்ணாநகர் ரவுண்டானா அருகே சென்றபோது திடீரென பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பஸ்சை வழிமறித்து குத்தாட்டம் போட்டனர். அப்போது, பஸ்சில் இருந்து 2 மாநில கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியுடன் கீழே இறங்கினர். இதை பார்த்ததும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் சாலையில் வாகனங்களில் வந்து கொண்டிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சாலையில் நடந்து சென்ற சிலர் ஓட்டம் பிடித்தனர். சிலர், இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலையங்களில் வெளியிட்டனர்.இந்த வீடியோ உயரதிகாரிகளுக்கு தெரிய வருவே அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் இன்ஸ்ெபக்டர் கோபாலகுரு, எஸ்ஐ செல்லத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் மாணவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று அண்ணா நகர் ரவுண்டானா அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, தகராறில் ஈடுபட்ட 2 மாணவர்களை  நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், சென்னை பாடிகுப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பி.ஏ. 3ம் ஆண்டு மாநில கல்லூரி மாணவன் சூர்யா (22), முதலாம் ஆண்டு மாணவன் கவுதம் (19) என தெரியவந்தது. இருவரிடம் இருந்தும் பட்டாகத்தி பறிமுதல் செய்யப்பட்டது. …

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi