Saturday, June 1, 2024
Home » எடுத்த முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது ஆன்லைனில் ரூ.5 லட்சம் இழந்ததால் வழிப்பறி கொள்ளையனாக மாறினேன்: கைதான சிவில் இன்ஜினியர் போலீசாரிடம் வாக்குமூலம்

எடுத்த முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது ஆன்லைனில் ரூ.5 லட்சம் இழந்ததால் வழிப்பறி கொள்ளையனாக மாறினேன்: கைதான சிவில் இன்ஜினியர் போலீசாரிடம் வாக்குமூலம்

by kannappan

சென்னை: ஆன்லைனில் ரூ.5 லட்சம் பணத்தை இழந்ததால் வாங்கி கடனுக்கு வழிப்பறி கொள்ளையனாக மாறியதாக கைதான இன்ஜினியர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் திருமணம் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தனது மகளுடன் வந்தார். மாம்பலம் பேருந்து நிலையித்தில் இருந்து கிரிதெருவில் உள்ள மண்டபத்திற்கு சென்றார். பிறகு மண்டபத்திற்குள் செல்லும் போது, திடீரென மர்ம நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்த இருந்த  தாலி செயினை பறித்து கொண்டு ஓடினார். இதை சற்றும் எதிர்பார்க்காத தமிழ்ச்செல்வி உதவி கேட்டு சத்தம் போட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற மர்ம நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், அதில் கே.கே.நகரை சேர்ந்த சரவணன்(24) என்றும், சிவில் இன்ஜினியரான இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து தாலி செயின் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சரவணனிடம் விசாரணைடியின் போது அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:கைதான சரவணன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர், இவர் நல்ல ஊதியத்தில் வேலை செய்து வருகிறார். இருந்தாலும் தனது நண்பர்களுடன் ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தால் சரவணன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் இழந்துள்ளார். சூதாட்டத்தில் விட்ட பணத்தை மீண்டு மீட்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ரூ.5 லட்சம் வரை பணம் வாங்கி சூதாட்டாம் ஆடியுள்ளார். ஆனால் அனைத்து பணமும் அவர் இழந்துவிட்டார். இதனால் பணம் கொடுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திரும்ப கேட்கின்றனர். என்னால் வாங்கிய பணத்ைத திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்தேன். அதற்காக பல வீடியோக்களை யூடியூப் மூலம் பார்த்து அப்படி வழிப்பறி செய்வது, அப்படி தப்பித்து ஓடுவது என்று தெரிந்து கொண்டேன். அதன்படி நான் வழிப்பறியில் ஈடுபட எடுத்து முதல் முயற்சியில் தோல்வியடைந்தேன். ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த ரூ.5 லட்சம் பணத்திற்கு இன்று நான் வழிப்பறி கொள்ளளையனாக மாறி, பெற்றோர், உறிவனர்கள் மற்றும் நண்பர்கள் முன்பு நான் தலைகுனிந்து நிற்கிறேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்….

You may also like

Leave a Comment

thirteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi