தர்மபுரி, மார்ச் 21: தர்மபுரி அருகே அலக்கட்டு மலை கிராமத்தில், இல்லம் தேடி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள சாலை வசதியில்லா மலை கிராமமான அலக்கட்டு கிராமத்தில், உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு உட்பட்ட நாகம்மா என்பவரால் நடத்தப்படும் இல்லம் தேடிக்கல்வி மையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பென்னாகரம் இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், தர்மபுரி இல்லம் தேடிக்கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் ஆகியோர் மையத்தை பார்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு இல்லம் தேடிக்கல்வி கையேடுகள், கற்றல் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அலக்கட்டு தலைமை ஆசிரியர் தமிழரசன், தற்காலிக ஆசிரியர் பசுவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.