Wednesday, May 15, 2024
Home » மாணவி பாலியல் பலாத்காரம்; குண்டாசில் வாலிபர் கைது

மாணவி பாலியல் பலாத்காரம்; குண்டாசில் வாலிபர் கைது

by kannappan

ஆவடி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஆவடி அடுத்த அய்யப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியிடம் லூடோ என்ற ஆன்லைன் ஆப் மூலமாக செங்கல்பட்டு பகுதியில் வசிக்கும் விக்கி(25), என்பவர் பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்நிலையில், விக்கி அந்த மாணவியை மிரட்டி நிர்வாணமாக படம் எடுத்து அனுப்ப வற்புறுத்தினார். மாணவி அதற்கு உடன்படவில்லை. இதனால் விக்கி யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அதை வீடியோவாக எடுத்து அதை அழிக்க ரூ.25 ஆயிரம் தரவேண்டும் என மாணவியை கேட்டு மிரட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆவடி மகளிர் போலீசார் மாமண்டூர் பகுதியில் தலைமறைவாக சுற்றித்திரிந்த விக்கியை கடந்த ஜூலை மாதம் காவல் நிலையம் அழைத்து வந்து போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், ஏற்கனவே விக்கி மீது ஆவடி மகளிர் காவல் நிலையம் மற்றும் சாத்தான்காடு உள்ளிட்ட காவல் நிலையங்களில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சட்டம் ஒழுங்கை காக்கும் நோக்கில் பாலியல் குற்றத்திற்காக ஆவடி காவல் ஆணையரகத்தில் முதன் முறையாக ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆணைக்கிணங்க துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் புருஷோத்தமன், ஆவடி மகளிர் ஆய்வாளர் லதா குற்றவாளி விக்கியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்….

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi