திருவள்ளூர்: திருமழிசை புது வட்டாரம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் யுவராஜ்(20). இவர் வேலை ஏதும் இன்றி ஊர் சுற்றி வந்தார். இந்நிலையில், யுவராஜ், மேல்ணம்பேடு கிராமத்தை சேர்ந்த 15 வயதான 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து 2 பேரும் தனியாக அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். அப்படி 2 பேரும் பேசுவதை யுவராஜ் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அந்த மாணவியை மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தந்தை வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் யுவராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்….