ஓமலூர்: சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலைய எல்லையில், சவுரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (42) கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கு படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று அந்த மாணவி ஆய்வகத்தில் இருக்கும்போது உள்ளே வந்த சரவணகுமார், திடீரென பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி வீடு திரும்பியதும் நடந்தது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கணித ஆசிரியர் சரவணகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். …
மாணவிக்கு தொல்லை: கணித ஆசிரியர் கைது
previous post